sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம் நிறைவு

/

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம் நிறைவு

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம் நிறைவு

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம் நிறைவு


ADDED : அக் 28, 2025 05:50 AM

Google News

ADDED : அக் 28, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் உற்சவ நிறைவு நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணி முதல் 8:45 மணி வரை நித்திய பூஜை, தொடர்ந்து மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து எழுந்தருளி பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதியில் மங்களா சாசனம், சேஷ வாகனத்தில் மணவாள மாமுனிகள் கோவிலை வலம் வந்தார்.

பகல் 11:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் எழுந்தருளி, மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நான்காயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us