sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

/

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா


ADDED : டிச 25, 2024 08:10 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா டி.ஆர்.ஓ., தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா டி.ஆர்.ஓ., சத்திய நாராயணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் கூறியதாவது : சிறுபான்மையினருக்கு

மின்மோட்டார்களுடன் கூடிய கட்டணமில்லா தையல் இயந்திரமும், ஜெருசேலம் புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி, கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க, புனரமைக்க ரூ.20 லட்சம் வரை அரசு நிதியுதவி வழங்குகிறது. கிராமப்புற சிறுபான்மையின மாணவிகளுக்கு 3 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.500ம், 6ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்குகிறது.

டாம்கோ மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 143 பயனாளிகளுக்கு ரூ.137.75 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதாரம் மேம்பட அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்திட வேண்டுமென தெரிவித்த டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கிறிஸ்துவ தேவாலய உபதேசியர், பணியாளர்கள் 6 பேருக்கு நலவாரிய அட்டை வழங்கினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா, சிறுபான்மையினர் முக்கிய பிரமுகர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us