/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரணை
/
பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரணை
ADDED : நவ 16, 2025 11:54 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பைக்திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அமுல்வாஜ்,37; இவர், கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். கடந்த 12ம் தேதி ஓட்டலுக்கு அருகே தனது பைக்கினை அமுல்வாஜ் நிறுத்திவிட்டு, ஓட்டலுக்குள் சென்றார்.
தொடர்ந்து, சில மணி நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் கிடைக்காததால்திருடு போன பைக்கினை கண்டுபிடித்துதரக்கோரி அமுல்வாஜ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

