ADDED : அக் 03, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கேசவன், 21; பெயிண்டர்.
கடந்த 1ம் தேதி ஆயுத பூஜையை முடித்து விட்டு, வேலை ஆட்களுக்கு கூலி வழங்கிவிட்டு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.