/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கார்டு குறை கேட்பு சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டு குறை கேட்பு சிறப்பு முகாம்
ADDED : அக் 12, 2025 04:36 AM

ரிஷிவந்தியம் : வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
வாணாபுரத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி , தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகன் முன்னிலை வகித்தனர். ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், மொபைல் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம் தொடர்பாக 28 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். இதில், மின்னணு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 24 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ உட்பட பலர் உடன் இருந்தனர்.