sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

/

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ADDED : ஜன 30, 2024 04:30 AM

Google News

ADDED : ஜன 30, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சாலையோர டிபன் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், காவலர் கண்ணன் மற்றும் போலீசார் மலைக்கோட்டாலத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒருவரது வீட்டில் அதிகளவு சாக்கு மூட்டைகள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து, அதை பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.

விசாரணையில், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர் மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த பூமாலை மகன் ராஜா, 31; என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, தீவனமாக அரைத்து கால்நடைகளுக்கு வழங்குவதும், மீதமுள்ள அரிசியை சாலையோர டிபன் கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரிந்தது.

தொடர்ந்து, ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், 32 சாக்கு மூட்டைகளில் இருந்த 1,280 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us