sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 தென் பெண்ணையாற்றின் படித்துறையை மீட்க கோரிக்கை

/

 தென் பெண்ணையாற்றின் படித்துறையை மீட்க கோரிக்கை

 தென் பெண்ணையாற்றின் படித்துறையை மீட்க கோரிக்கை

 தென் பெண்ணையாற்றின் படித்துறையை மீட்க கோரிக்கை


ADDED : டிச 09, 2025 03:44 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றின் படித்துறையை மீட்டெடுத்து, புனிதத்தை காக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலுார், ஆற்றங்கரை நாகரீகத்திற்கு எடுத்துக்காட்டான பழமையான நகரம். நகரின் வடக்கே வற்றாத ஜீவ நதியான தென்பெண்ணை பாய்ந்து ஓடுகிறது. பக்தர்களும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு வசதியாக பஸ் நிலையம் எதிரில் உள்ள ஆற்றின் கரையில் படித்துறை அமைக்கப்பட்டிருந்தது.

தைத்திங்கள் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில், உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் வைபவங்களில் பெருமாள் இந்த படித்துறையின் வழியாக எழுந்தருளி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இன்று படித்துறை இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் குப்பைகள் கொட்டப்பட்டு ஆற்றை பட்டா நிலம் போல் மாற்றி, வேலி போட்டு பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் பன்றி வளர்ப்பது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்கள் கொட்டிய மண் சேறும் சகதியுமாகி, பன்றிகள் உலாவும் அசுத்தம் நிறைந்த பகுதியாக தென்பெண்ணையாறு உள்ளது.

பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை வெளிக் கொண்டு வந்து ஆற்றின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us