/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
/
திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ADDED : அக் 01, 2025 11:11 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கும், 11 கட்டங்களாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வார்டு எண் 26, 27க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சந்தப்பேட்டை எம்.ஜெ., மஹாலில் நேற்று முன்தினம் நடந்தது.
நகராட்சி ஆணையர் திவ்யா வரவேற்றார். நகராட்சி சேர்மன் முருகன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்முடி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய மின்னணு ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றம் என 13 அரசுத்துறையைச் சேர்ந்த, 43 சேவைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தாசில்தார் ராமகிருஷ்ணன், பொறியாளர் ஜெயபிரகாஷ், நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.