
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரம தலைமை குருஜி அனந்தானந்த மகராஜ் வழிகாட்டுதலில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலையில் நடந்த திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் சார்பாக ராமானுஜ தேசிகதாசன் கோதண்டபாணி- சுசீலா வழக்கறிஞர்கள் பக்கிரிசாமி-மகாலட்சுமி, அன்பழகன்- தமிழரசி, பாலாஜி- புஷ்பலதா, விஜயலட்சுமி-பாலசுப்ரமணியனும், பெண் வீட்டார் சார்பில் நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன்-சாரதா, வழக்கறிஞர் மோகன்ராஜ் - லஷ்மி காத்யாயிணி, அம்பிகாபதி -பிரேமா, அருண்ராஜ் -பிரிஷித்தா சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ், உறுப்பினர்கள் வசந்திநல்ல குழந்தைவேல், தினேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

