ADDED : அக் 16, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 2 பசுமாடுகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரை சேர்ந்தவர் ஆறுமுகம்,63; இவர் கடந்த 13 ம் தேதி இரவு நிலத்தின் அருகில் உள்ள மாட்டுகொட்டகையில் பசுமாடுகளை கட்டி விட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது 2 பசுமாடுகளை மர்ம காணவில்லை. இதன் மதிப்பு 80 ஆயிரம் ஆகும்.
ஆறுமுகம் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து பசுமாடுகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.