sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

/

 சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

 சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

 சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்


ADDED : டிச 03, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணையின் முழு கொள்ளளவு உயரம் 119 அடி. அதன் முழு உயரத்தை எட்டாத நிலையில், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 26ம் தேதி அணையிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் கணித்த அளவை விட மழையின் தாக்கம் குறைவாக இருந்ததால், வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 950 கன அடி என்ற விகிதத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், கடந்த 28ம் தேதி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. அணையில் 115.50 அடி அதாவது 6,549 மில்லியன் கன அடி நீர், 89.45 சதவீதம் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை இனி வரும் நாட்களில் வானிலை ஆய்வு மையம் கணித்த அளவில் மழை பெய்தால் மட்டுமே அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்பனையாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us