/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்கப்படுமா?
/
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : நவ 22, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் - கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இச்சாலை வாகன போக்குவரத்து மிகுதியான சாலையா க உள்ளது.
சில நேரங்களில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால், விபத்து அபாயமும் உள்ளது. சாலையை மாணவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

