/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 15, 2024 07:30 PM
காஞ்சிபுரம்:சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும், 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினமான, ஜனவரி 24ல் மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது. மேலும், காசோலையாக 1 லட்ச ரூபாயும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல் வேண்டும்.
விருது பெற குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன், அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனைகள் பற்றி ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்களுடன், நவ.20க்குள், சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.