sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்

/

மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்

மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்

மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்


ADDED : ஆக 28, 2024 09:03 PM

Google News

ADDED : ஆக 28, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மாகறல் கிராமத்தில், திருமாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ராஜகோபுரம், பரிவார சன்னிதிகளான விநாயகர், ஆறுமுக சுவாமி, கஜருத சுப்பிரமணியசுவாமி, பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு திருப்பணி துவங்க கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி பாலாலயம் நடந்தது.

இதில், மூலவர் விமானம், தாயார் விமானம், சன்னிதி உட்புறம் தவிர, பரிவார மூர்த்தி சன்னிதி, ராஜகோபுரம், சுற்றுச்சுவர், முன் மண்டபம் உள்ளிட்ட திருப்பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூலவர் சன்னிதி திருப்பணிக்கான பாலாலயம் நாளை, காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us