sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி

/

சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி

சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி

சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி


ADDED : ஆக 08, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 08, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் கோவில் அருகில் உள்ளது. பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால் பொய்கை ஆழ்வார் குளம் என, அழைக்கப்படுகிறது.

இக்குளம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்த நிலையில் இருந்தது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், 4,080 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில்,குளத்தின் தென்மேற்கு திசையில் மழைநீர்சேகரிப்பு தொட்டியின் சிமென்ட் சிலாப் உடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில்,அப்பகுதியினர் மழைநீர் சேகரிப்பு தொட்டியின் மீது குப்பையை கொட்டுவதால், குளத்திற்கு மழைநீர் செல்லும்போது, பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை குவியல் குளத்திற்குள் செல்வதால், குளத்துநீரும், நிலத்தடிநீரும் மாசடையும் சூழல் உள்ளது.மேலும், 17.8 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம்சீரழியும் நிலையில்உள்ளது.

எனவே, குளத்தை ஒட்டியுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடவும், குப்பை கழிவுகள் குளத்திற்கு செல்வதை தடுக்கவும், 'பில்டர்' அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us