sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

/

போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்


ADDED : மே 02, 2024 01:14 AM

Google News

ADDED : மே 02, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை, இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து, இந்திய தர நிர்ணய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுர் மாவட்டம் அலமாதி கிராமத்தில், அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் ஆலையில், இந்திய தர நிர்ணய அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு, போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையை பயன்படுத்தி, தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 2 லிட்டர் அளவுள்ள, 1,782 தண்ணீர் பாட்டில்கள், 1 லிட்டர் அளவுள்ள 11,616 தண்ணீர் பாட்டில்கள், 500 மி.லி., அளவுள்ள 9,600 தண்ணீர் பாட்டில்கள், 300 மி.லி., அளவுள்ள 10,465 பாட்டில்கள் மற்றும் 2.5 லட்சம் போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை 'லேபிள்'களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சட்டவிரோத ஆலை, பி.ஐ.எஸ்., உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த குற்றத்துக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்களுக்கு இதுபோன்ற தகவல் கிடைத்தால், 'பி.ஐ.எஸ்., கேர்' செயலியை பயன்படுத்தியும் www.bis.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us