ADDED : பிப் 22, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ், 42. இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம் பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின், உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, மோசஸை கைது செய்து விசாரிக்கின்றனர்.

