/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விஷார் அகத்தியர் கோவிலில் மே 3ல் கும்பாபிஷேகம்
/
விஷார் அகத்தியர் கோவிலில் மே 3ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 30, 2024 09:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விஷாரில், லோபாமுத்திரை அம்பிகா சமேத அகத்திய பெருமானுக்கு கருங்கற்களால், புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் பாலவிநாயகர், பாலசுப்ரமணியர் சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மாலை 4:00 மணிக்கு யாக சாலை பூஜை துவங்குகிறது.
நாளை மறுதினம், காலை 7:45 மணிக்கு கோவில் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து விநாயகர், முருகர், லோபாமுத்திரை அம்பிகா சமேத அகத்திய பெருமானுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.