sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்

/

தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்

தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்

தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்


ADDED : ஏப் 01, 2024 04:22 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, மார்ச் 16ம் தேதி முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

அன்று முதல், தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

வேட்புமனு பெறுதல், பரிசீலனை போன்றவை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளும் முடிந்ததால், விழிப்புணர்வு பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களில் தேர்தல் உறுதிமொழி எடுத்தல், கிராம மக்களை திரட்டி பேரணி நடத்துதல், தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் துண்டு பிரசுரம் வழங்குவது, மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாயிலாக கோலமிடுவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடக்கின்றன.

குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடக்கின்றன. 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, வாக்காளர் பார்க்கும் வகையில், கலெக்டர் கலைச்செல்வி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுபோல, பல்வேறு விழிப்புணர்வு பணிகள், மாவட்டம் முழுதும் தொடர்ந்து நடக்கின்றன.






      Dinamalar
      Follow us