sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் 371 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியில் இலவச வீடு கட்ட ஆணை

/

உத்திரமேரூரில் 371 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியில் இலவச வீடு கட்ட ஆணை

உத்திரமேரூரில் 371 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியில் இலவச வீடு கட்ட ஆணை

உத்திரமேரூரில் 371 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியில் இலவச வீடு கட்ட ஆணை


ADDED : செப் 04, 2024 11:37 PM

Google News

ADDED : செப் 04, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், 371 பயனாளிகளுக்கு, 12.98 கோடி ரூபாயில் இலவச வீடு கட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்ட, ஒரு வீட்டிற்கு 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக, சில மாதங்களாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வாயிலாக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்தன.

அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில், 371 பயனாளிகளுக்கு, 12 கோடியே 98 லட்சம் ரூபாயில் வீடு கட்ட நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது.

இதேபோன்று, பல ஆண்டுகளுக்கு முன் கட்டி சேதமடைந்த இந்திரா காந்தி நினைவு தொகுப்பு வீடுகள் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் திட்ட வீடுகள் பழுது பார்க்க உத்திரமேரூர் ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக உத்திமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 427 பயனாளிகளுக்கு நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் பி.டி.ஒ., அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று பணி ஆணை வழங்கினர்.

உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமாவதி, துணை தலைவர் வசந்தி மற்றும் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us