/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த 17 ஏரிகளில் சீரமைப்பு பணிகள்
/
சேதமடைந்த 17 ஏரிகளில் சீரமைப்பு பணிகள்
ADDED : செப் 11, 2024 08:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுற்றியுள்ள நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் பல மோசமான நிலையில் இருந்தன. இந்த ஏரிகள், கரைகள் சேதமாகியும், கலங்கல், மதகு போன்றவை சீரமைக்க வேண்டிய தேவை இருந்தது.
எனவே, காஞ்சிபுரம் சுற்றியுள்ள 17 ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஏரிகளுக்கு தேவையான சீரமைப்பு பணிகளை நீர்வளத் துறை கடந்தாண்டு துவக்கியது.
கரையை பலப்படுத்துவது, கலங்கல், மதகு சீரமைப்பது, வரத்து கால்வாயை துார்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்காக, நீர்வளத் துறை 11.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவிட்டுள்ளது.
இந்த 17 ஏரிகளில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்ததாகவும், அலைக்கற்கள் பதிப்பது உள்ளிட்ட சிறிய பணிகள் மட்டும் பாக்கி இருப்பதாகவும், அவை இம்மாதம் நிறைவு பெறும் என, நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.