/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
/
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 12:09 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை ஓரம், எம் - சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் பிரதான ரயில் கடவுப்பாதையாக இருக்கும் பகுதியில், மேம்பாலம்அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டம் தயாரிக்கவில்லை.
இதனால், திருமால்பூர் - -அரக்கோணம் மற்றும் அரக்கோணம்- - திருமால்பூர் மார்க்கமாக ரயில்கள் செல்லும் போது, சேந்தமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் - -நெமிலி சாலை வரையில், 2 கி.மி., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுக்கின்றன.
எனவே, ராணிப்பேட்டை மாவட்ட சேந்தமங்கலம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.