/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வைப்பூர் சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரிக்கை
/
வைப்பூர் சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : மே 06, 2024 05:05 AM

ஸ்ரீபெரும்புதுார் : போக்குவரத்து நிறைந்த வைப்பூர் சந்திப்பில், விபத்தை தவிர்க்கும் வகையில், சிக்னல் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். ஒரகடம் அடுத்த, பனப்பாக்கத்தில் இருந்து, வைப்பூர் சாலை சந்திப்பு உள்ளது.
வைப்பூர், எறையூர் கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தவிர, இந்த சாலையில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில், போக்குவரத்து நிறைந்த வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் இருந்து, வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் எளிதில் இந்த சந்திப்பில் சாலையை கடக்க முடியவில்லை.
சிக்னல் இல்லாததால், 'பீக் ஹவர்' நேரங்களில், தாறுமாறாக செல்லும் வாகனங்களால், அடிக்கடிவிபத்துகள் நடந்து வருகின்றன.
எனவே, அங்கு ஏற்படும் நெரிசல் மற்றும் விபத்தை தடுக்கும் வகையில், சிக்னல் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.