sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

/

சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 22, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கு மேலாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

நாட்கணக்கில் தேங்கும் கழிவுநீர் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியினர் வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.

வீட்டு வாசலில் தேங்கும் கழிவுநீரால், அப்பகுதியினர் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - -மாணவியர், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால் பாதசாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us