sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாத்துாரில் சேதமடைந்த வடிகால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்

/

மாத்துாரில் சேதமடைந்த வடிகால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்

மாத்துாரில் சேதமடைந்த வடிகால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்

மாத்துாரில் சேதமடைந்த வடிகால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்


ADDED : ஆக 22, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரகடம் அடுத்த, மாத்துார் பகுதியில், மழைநீர் வடிகால் சேதமடைந்து, அதிலிருந்து கழிவுநீர் சர்வீஸ் சாலையில் வெளியேறி வருகிறது.

இதனால், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவாதோடு, தொற்று நோய் பரவும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

எனவே, சேதமான மழைநீர் வடிகாலை சரிசெய்து, சாலையில் கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us