/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நசரத்பேட்டையில் தடுப்புச்சுவரின்றி சிறுபாலம்
/
நசரத்பேட்டையில் தடுப்புச்சுவரின்றி சிறுபாலம்
ADDED : ஆக 24, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நசரத்பேட்டை, அறிஞர் அண்ணா தெருவில் இருந்து, பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானம், கன்னிகாபுரம், தாட்டித்தோப்பு, முத்தியால்பேட்டை, உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே, மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.
இந்த சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.