/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உடலுறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை
/
உடலுறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை
ADDED : ஆக 27, 2024 01:00 AM
பவுஞ்சூர்: பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு, 59. விவசாய வேலை செய்து வந்தார்.
இவர், கடந்த வாரம், தலைவலி காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி, மூளைச் சாவு அடைந்தார். பின், துரைபாபுவின் உடல் உறுப்புகளை, அவரின் குடும்பத்தினர் தானம் செய்தனர்.
இதையடுத்து, நீலமங்கலம் கிராமத்தில்வைக்கப்பட்டு இருந்த துரைபாபுவின் உடலுக்கு, மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர், நேற்று நேரில் சென்று, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.