/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைந்து குடிநீர் வீண் 1 மாதமாக தொடரும் அவலம்
/
குழாய் உடைந்து குடிநீர் வீண் 1 மாதமாக தொடரும் அவலம்
குழாய் உடைந்து குடிநீர் வீண் 1 மாதமாக தொடரும் அவலம்
குழாய் உடைந்து குடிநீர் வீண் 1 மாதமாக தொடரும் அவலம்
ADDED : ஆக 22, 2024 12:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் சங்கூசா பேட்டைக்கும், காமராஜர் வீதிக்கும் இடையே மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள பாவாஜி தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.
குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலை சேதமடைந்துள்ளது.
எனவே, காஞ்சிபுரம் - பாவாஜி தெருவில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.