/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊரக வளர்ச்சி துறையினர் வேலை நிறுத்தப் போராட்டம்
/
ஊரக வளர்ச்சி துறையினர் வேலை நிறுத்தப் போராட்டம்
ADDED : ஆக 24, 2024 12:33 AM

காஞ்சிபுரம்,:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றும், நேற்றுமுன்தினமும் நடந்து வருகிறது.
குறிப்பாக, ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு திட்டத்தில், 50 சதவீதம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்த போராட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், இளநிலை உதவியாளர், உதவியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அலுவலகங்கள் வெறிச்சோடி இருந்தன.