/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் திருவாசகம் முற்றோதல்
/
காஞ்சியில் திருவாசகம் முற்றோதல்
ADDED : மே 17, 2024 12:00 AM
காஞ்சிபுரம்:பன்னிரு சைவ சமய திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், ஆயில்யம் திருநட்சத்திரத்தன்று, சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான திருவாசகத்தை இயற்றி, மகம் நட்சத்திர தினத்தன்று அரங்கேற்றம் செய்தார்.
திருவாசகம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில், சித்திரை மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி, வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டியும், திருவண்ணாமலை கிரிவலக்குழு சார்பில், காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களில், 658 வரிகளையும், கிரிவலக்குழு செயலர் எஸ்.டி.கங்காதரன் தலைமையிலான, திருவண்ணாமலை கிரிவல குழுவினர் முற்றோதல் செய்தனர். இதில், சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.

