/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2025 12:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பெருமாள் தெரு வழியாக மீன் மார்க்கெட், ஏகாம்பரநாதர் கோவில், புதிய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்து இச்சாலையில், மீன் மார்க்கெட் எதிரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதனால், இவ்வழியாக நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
இதுகுறித்து புகார் தெரிவித்தால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், லாரி வாயிலாக அடைப்பு நீக்குகின்றனர். ஓரிரு நாளில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, பெருமாள் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.