sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

/

புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 27, 2024 11:29 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு, கவரை தெருவிற்கும், பாலாஜி நகருக்கும் இடையே மழைநீர்சேகரிப்பு குட்டை ஒன்று உள்ளது.

அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள இந்த குட்டை, மழையின்போது முழுமையாக நிரம்பினால், குட்டையில் இருந்து உபரி நீர் மஞ்சள்நீர் கால்வாய் வாயிலாக வெளியேறும் வகையில் கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பாலாஜி நகர், சிந்தாமணி விநாயகர் கோவில் ஒட்டியுள்ள பகுதியில், கால்வாய் நீர்வழித்தட பகுதியில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது.

இதனால், வட கிழக்கு பருவமழையின்போது, மழைநீர் சேகரிப்பு குட்டை முழுமையாக நிரம்பினால், குட்டையில் இருந்து வெளியேற வேண்டிய உபரிநீர் வடிகால்வாய் வாயிலாக வெளியேறாமல், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் நிலை உள்ளது.

எனவே, பாலாஜிநகரில் புதர்மண்டியுள்ள வடிகால்வாயை, துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.






      Dinamalar
      Follow us