sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் கொசு அதிகரிப்பு மாநகராட்சி விழிக்குமா?

/

காஞ்சியில் கொசு அதிகரிப்பு மாநகராட்சி விழிக்குமா?

காஞ்சியில் கொசு அதிகரிப்பு மாநகராட்சி விழிக்குமா?

காஞ்சியில் கொசு அதிகரிப்பு மாநகராட்சி விழிக்குமா?


ADDED : பிப் 21, 2025 08:44 PM

Google News

ADDED : பிப் 21, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழைக்கு பின், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில், காலை பனிப்பொழிவு நிலவி வருகிறது. பருவநிலை மாற்றத்தால், காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் செல்லும் மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளான உப்பேரிகுளம், புத்தேரி, பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, ஆனந்தாபேட்டை, ரெட்டிப்பேட்டை, நேதாஜி நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.

இப்பகுதியில், மாலை 6:00 மணிக்கு மேல் படையெடுத்து வரும் கொசுக்களால், இரவில் நிம்மதியாக சாப்பிட முடியாமலும், துாங்க முடியாமலும் பகுதிவாசிகள் கொசு கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுக்காததால், நகர் முழுதும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், நகரவாசிகளுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கொசு ஒழிப்பு நடவடிக்கையாக நகர் முழுதும் கொசு மருந்து புகை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us