/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொள்ளாழி, குன்னத்தில் உலக வங்கி இயக்குனர் ஆய்வு
/
தொள்ளாழி, குன்னத்தில் உலக வங்கி இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 13, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, தொள்ளாழி மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா குண்ணம் ஆகிய கிராமங்களில், நீர்வள -- நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டங்களை, உலக வங்கி இயக்குனர் முனைவர் ஷோபாசெட்டி நேற்று மாலை ஆய்வு செய்தார். இதையடுத்து, வேளாண் விதைகள், உரம் ஆகிய இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில், நீர்வள - நிலவள திட்ட இயக்குனர் ஜவகர், கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் மற்றும் வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர்உடனிருந்தனர்.