ADDED : பிப் 15, 2024 12:26 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உலோக சிலைகள் மற்றும் 13 கற்சிலைகள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சு.உமாசங்கர் கூறியதாவது:
பொன்னேரி வட்டத்தில்,17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வேணுகோபாலர் உலோக சிலை, விஷ்ணு, ஸ்ரீதேவி கற்சிலை, 20ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோக சிலை என, 13 கற்சிலைகள் 2020 --- 23ம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஐந்து உலோக சிலைகள், ஒரு கோவில் மணி உள்ளிட்ட 19 பொருட்கள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இச்சிலைகளை காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம், யாத்ரி நிவாஸ் அருகில், புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய உள்ள இடத்தில், பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

