ADDED : நவ 17, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை போலீசார், சென்னை -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 'டாடா' லாரி மற்றும் 'பாரத் பென்ஸ்' லாரியில், அரசு அனுமதியின்றி மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மணல் கடத்தியதாக காஞ்சிபுரம் அடுத்த வேளியூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமாரன், 26, விக்னேஷ், 25, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.