/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு
ADDED : செப் 25, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, : வியாசர்பாடி, பொன்னையன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 51; தி.நகரில் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிகிறார்.
இவரது மனைவி செல்வி; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.
மாலையில் மாரிமுத்துவீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 57 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது.