sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குமரகோட்டம் முருகன் கோவிலில் 6 ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கல்

/

குமரகோட்டம் முருகன் கோவிலில் 6 ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கல்

குமரகோட்டம் முருகன் கோவிலில் 6 ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கல்

குமரகோட்டம் முருகன் கோவிலில் 6 ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கல்


ADDED : பிப் 03, 2025 01:48 AM

Google News

ADDED : பிப் 03, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:குமரகோட்டம் என அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடந்தன. இந்த மணமக்களுக்கு, தலா நான்கு கிராம் தங்கம் மற்றும் 60,000 ரூபாய் மதிப்பிலான திருமண சீர்வரிசை பொருட்களை கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

இதில், ஹிந்து அறநிலைய துறை இணை ஆணையர் குமரதுரை மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வல்லக்கோட்டை

ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஹிந்து அறநிலையத் துறை சார்பில், தை முகூர்த்த நாளான நேற்று, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, ராஜகுரு -- சங்கீதா ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, அரசு சார்பில் 4 கிராம் தங்கம் மற்றும் பீரோ, கட்டில் உள்ளிட்ட 60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், அறங்காவலர் விஜயகுமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us