/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்மருவத்தூர் செல்ல நேரடி பஸ் வசதி தேவை
/
மேல்மருவத்தூர் செல்ல நேரடி பஸ் வசதி தேவை
ADDED : செப் 19, 2024 08:10 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், பல்வேறு காரணங்களுக்காக தினசரி மேல்மருவத்தூர் செல்கின்றனர். உத்திரமேரூர் மற்றும் சுற்றிவட்டாரத்தினர், தென் மாவட்ட பகுதிகளுக்கு ரயில் வாயிலாக பயணிக்க வேண்டுமென்றால், பகல் மற்றும் இரவு நேரங்களில், மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயில் பிடித்து செல்லும் நிலை உள்ளது.
உத்திரமேரூரில் இருந்து, மேல்மருவத்தூர் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லாததால், மதுராந்தகம் சென்று அங்கிருந்து பேருந்து மாறி செல்லும் நிலை தொடர்கிறது.
இதனால், நேரம் விரயமாவதோடு 15 கி.மீ., தூரம் கூடுதலாக சுற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.
எனவே, உத்திரமேரூரில் இருந்து, எண்டத்தூர், செம்பூண்டி, கீழாமூர், அகிலி, சோத்துப்பாக்கம் வழியாக மேல்மருவத்தூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் வரை நேரடியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என, உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.