sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

/

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்


ADDED : செப் 05, 2025 01:54 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களால், விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது.

இங்கு, உணவகம், ஜவுளிக்கடை, மருந்தகம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒரகடத்தை சுற்றியுள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் பல்வேறு தேவைக்காக ஒரகடம் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், ஒரகடம் சந்திப்பில் உள்ள உணவகங்களுக்கு வரும், கனரக வகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களை, மேம்பாலம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்துகின்றனர்.

இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள க னரக வாகனங்களின் மீது மோதி, விபத்துக்குள்ளாகி வருகின்றன. முக்கிய சந்திப்பு சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us