ADDED : பிப் 04, 2025 07:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், பொற்பந்தல், எடமச்சி, சாலவாக்கம் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் சோமசுந்தரம் பேசுகையில், “வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற, பூத் கமிட்டி உறுப்பினர்கள் நன்றாக உழைக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால், பூத் கமிட்டி உறுப்பினர்கள், வீடுகள்தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.