sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

12 வகையான பணிகளுக்கு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு

/

12 வகையான பணிகளுக்கு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு

12 வகையான பணிகளுக்கு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு

12 வகையான பணிகளுக்கு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு


ADDED : செப் 19, 2024 09:17 PM

Google News

ADDED : செப் 19, 2024 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, சமீப நாட்களுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்ந்துது. சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், உள்ளூர் மக்கள் என, ஸ்ரீபெரும்புதுாரின் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

ஆனால், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால், நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவ்வப்போது, பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், நகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், சாலை, மழைநீர் வடிகால் அமைப்பது போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் பஜனை கோவில் பிரதான சாலை பகுதியில், சிமென்ட் கல் சாலை அமைப்பது, குலசேகர பெருமாள் கோவில் தெருவில் சிமென்ட் கல் சாலை அமைப்பது, திருமங்கையாழ்வார் தெரு சுடுகாடு சுற்றுச்சுவர் அமைப்பது, பூதேரிபண்டை பிள்ளையார் கோவில் தெருவில் மூடிய பலகையுடன் மழைநீர் வடிகால் அமைப்பது என, 12 வகையான பணிகள், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், 1.8 கோடி ரூபாய், பொது நிதியில் இருந்து மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us