
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி மற்றும் எஸ்.பி., சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் இந்த பேரணியில் பங்கேற்றனர். லஞ்சம், ஊழல் போன்றவைகளால் ஏற்படும் சமூக பாதிப்பு பற்றி, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகர் முழுதும் வலம் வந்தனர்.
இப்பேரணியில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன், முதன் மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.