நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி, 26; அதே கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பாலுச்செட்டிசத்திரம் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, போலீசாரிடம் ஹரி சிக்கிக் கொண்டார். அவரிடம் இருந்த, 3,200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹரி மீது, ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உட்பட மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

