sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செல்லம்மாள் நகர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் நிதி வீண்

/

செல்லம்மாள் நகர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் நிதி வீண்

செல்லம்மாள் நகர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் நிதி வீண்

செல்லம்மாள் நகர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் நிதி வீண்


ADDED : ஆக 02, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:செல்லம்மாள் நகர் பூங்காவை முறையாக பராமரிக்காததால், அரசு நிதி வீணாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, செல்லம்மாள் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், 2023ல், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 34 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, ஒராண்டாக பூங்கா முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பூங்கா வளாகத்தில் முட்செடிகளும், நடைபாதையில் புற்களும் வளர்ந்து வருகின்றன.

பூங்காவில் உள்ள மின்விளக்குகளின் கேபிள்கள் திருடப்பட்டுள்ளதால், இருள் சுழந்து உள்ளது. இதனால், மாலை நேரங்களில் சிறுவர்கள், மகளிர், முதியோர் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பூங்கா, பராமரிப்பு இல்லாமல் அரசு நீதி வீணாகி வருகிறது. இந்த பூங்காவை சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, பராமரிப்பின்றி கிடக்கும் செல்லம்மாள் நகர் பூங்காவை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us