ADDED : டிச 22, 2024 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உத்திரமேரூர் தாலுகா கிளை சார்பில், அம்பேத்கரை அவமதித்து பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன், மாவட்ட செயலர் நேரு தலைமையில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலகுமாறு, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.