sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

/

20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'


ADDED : அக் 07, 2025 01:49 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், காஞ்சிபுரத்தில் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தை துவக்கினர்.கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் அருகே, நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தை துவக்கினர். போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு செயலர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கூட்டுறவு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி குறைப்பை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில், புளுடூத் இணைப்பு ஏற்படுத்தி, எடை போடும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 25 கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us