sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் துணை சுகாதார நிலைய சுவரில் விரிசல்

/

அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் துணை சுகாதார நிலைய சுவரில் விரிசல்

அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் துணை சுகாதார நிலைய சுவரில் விரிசல்

அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் துணை சுகாதார நிலைய சுவரில் விரிசல்


ADDED : ஜூன் 02, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே, அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்தில் மேல்பாக்கம், அனுமந்தண்டலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு, வாரந்தோறும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தியும், கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனையும் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், சேதமடைந்துள்ள சுவரில் அரச மரச்செடிகள் வளர்ந்துள்ளன.

இதனால், கட்டட சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மழை நேரங்களில் கட்டட சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல் வழியே மழைநீர் வழிந்து மருத்துவ உபகரணங்கள், பதிவேடுகள் ஆகியவை சேதமடைந்து வருகின்றன.

எனவே, சேதமடைந்துள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கூறியதாவது:

இளநகர் அரசு துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதமடைந்து உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான, ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us