/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிரிக்கெட் பயிற்சி கூடம் துவக்கம்
/
கிரிக்கெட் பயிற்சி கூடம் துவக்கம்
ADDED : நவ 12, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: ஒரகடம் திருவேனி பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி கூடம் துவக்க விழா நேற்று நடந்தது.
ஒரகடத்தில் உள்ள திருவேனி பள்ளியில் மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி கூடம் துவக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவையொட்டி, முதல் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.
அப்பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை முதல்வர் முனைவர் ஆனந்த் துவக்கி வைத்தார்.
கிரிக்கெட் பயிற்சியாளர் வினோத் குமார் உடனிருந்தார். போட்டிக்கான ஏற்பாட்டை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

