sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் புத்தேரியில் மின்விபத்து அபாயம்

/

மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் புத்தேரியில் மின்விபத்து அபாயம்

மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் புத்தேரியில் மின்விபத்து அபாயம்

மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் புத்தேரியில் மின்விபத்து அபாயம்


ADDED : அக் 18, 2024 01:43 AM

Google News

ADDED : அக் 18, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, மேட்டு தெருவிற்கு செல்லும் பிரதான சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், சாலையோரம் அமைந்துள்ள இரு மரத்தின் கிளைகள் மின்கம்பிகளை உரசும் வகையில், கம்பிகளை மறைக்கும் அளவிற்கு, புதர்போல வளர்ந்துள்ளது. காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும்,மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மின்கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us